உள்ளூர் செய்திகள்

அனிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை

Published On 2023-09-02 09:24 GMT   |   Update On 2023-09-02 09:24 GMT
  • நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா படத்திற்கு ஜெயங்கொண்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
  • மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையில் வி.சி.க சார்பில் நடைபெற்றது

ஜெயங்கொண்டம்,

நீட் தேர்வினால் உயிரை இழந்த அரியலூர் அருகே உள்ள குழுமூரை சேர்ந்த அனிதாவின் உருவப்படத்திற்கு ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 6 -ம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் இலக்கிய தாசன், மாநில பொறுப்பாளர்கள் கொளஞ்சி, இளங்கோ மணி, சிபி ராஜா, மற்றும் நிர்வாகிகள் சின்னராசா சுந்தர் சி கா குமார் முத்துகிருஷ்ணன் சரவணன் சிவகுமார் இளைய பாரதி லோகு நாகா சக்திவேல் வெங்கட் உள்ளிட்ட மாநில மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டடோர் ஏராளமானோர் கலந்து கொண்டு அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News