உள்ளூர் செய்திகள் (District)

திருமானூரில் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்

Published On 2023-03-29 05:50 GMT   |   Update On 2023-03-29 05:50 GMT
  • பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை தொடர்ந்து கொண்டாட்டம்
  • பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினர்

திருமானூர்,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.அதன்படி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியம் சார்பாக கொண்டப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமையில் கீழப்பழூரில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து , இனிப்பு வழங்கி கொண்டாடினர்.மேற்கு ஒன்றிய சார்பாக அக்பர் சரீப். தனலட்சுமி மருதமுத்து. செந்தில்குமார். கமலக்கண்ணன். மலர்விழி நல்லதம்பி. பாவேந்தன். இலந்தை தேவர். இளையராஜா. மணிவேல். சித்ரா உதயகுமார். அய்யாக்கண்ணு. தில்லை திருவாசகமணி. மற்றும் பல தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து திருமானூர் கிழக்கு ஒன்றிய சார்பாக ஒன்றிய செயலாளர் வடிவழகன் தலைமையில் திருமானூரில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில் சேட்டு ராஜேந்திரன் டி வி ஆர் கார்த்தி. ஜே கே கார்த்தி. மகாலட்சுமி கருணாநிதி. நடராஜன். சரவணன், முருகேசன், சௌந்தர், சபரிநாதன் , தவமணி, சாமிநாதன், மாரியப்பன். பிரதீவு ராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News