உள்ளூர் செய்திகள் (District)

அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க தொடக்க விழா

Published On 2022-11-28 09:33 GMT   |   Update On 2022-11-28 09:33 GMT
  • அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க தொடக்க விழா நடைபெற்றது.
  • அமைச்சர் பெயர் பலகையை திறந்து வைத்தார்

அரியலூர்:

அரியலூரில் தமிழ்நாடு நகராட்சிகள் அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சங்க கொடியை ஏற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கே.கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சக்திவேல், செயலர் ஆர்.சீனிவாசன், துணைச் செயலர் கே.வில்லவன், பொருளாளர் ஓ.சுகுமாறன், கௌரவத் தலைவர் முருகேசன், சங்க காப்பாளர் கே.அருண்ராஜா, சட்ட ஆலோசகர் எஸ்.விஜி மற்றும் திமுக பொதுக் குழு உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags:    

Similar News