- நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது
- வாலாஜா ஊராட்சியில்
அரியலூர்:
அரியலூர் அடுத்த வாலாஜா நகர ஊராட்சியில், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த சிறப்பு முகாம் நிறைவுப்பெற்றது.
நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமிதுரை தலைமை வகித்தார். மாவடட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஏ.குணசேகரன் கலந்து கொண்டு, முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி, மாணவர்கள் அனைவரும் சமுதாய தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பள்ளி துணை ஆய்வாளர் ஆர்.பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் கோவிந்தசாமி வரவேற்றார். முடிவில் சிறப்பாசிரியர் ஜெ.சார்லஸ் நன்றி தெரிவித்தார். இந்த ஏழு நாள்கள் நடைபெற்ற முகாமில், மரக்கன்றுகள் நடுதல், கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தூய்மைப் பணி, பொது மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம், போதை ஓழிப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.