உள்ளூர் செய்திகள் (District)

மான் பலி

Published On 2023-02-28 06:37 GMT   |   Update On 2023-02-28 06:37 GMT
  • அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபம்
  • வனத்துறையினர் விசாரணை

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுந்தரேசபுரம் கிராமம் விளாங்குடி-தா.பழூர் சாலையில், உடல் நசுங்கிய நிலையில் மான் ஒன்று செத்து கிடப்பதாக, அவ்வழியாக கடந்து சென்ற பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் செத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வனத்துறை காப்பாளர் முத்துராஜ் மானின் உடலை கைப்பற்றி, உடல் பரிசோதனைக்காக எடுத்து சென்றார். விளாங்குடி கால்நடை மருத்துவர் மகாலட்சுமி மானின் உடலை மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் வனப்பகுதியில் செத்த மான் புதைக்கப்பட்டது.

Tags:    

Similar News