உள்ளூர் செய்திகள் (District)

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2023-04-09 06:17 GMT   |   Update On 2023-04-09 06:17 GMT
  • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டினர்
  • திருப்பலியை ஆலய பங்கு தந்தை அதிபர் தங்கசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார்.

திருமானூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கருக்காவூர் என்னும் ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப் பட்ட சுற்றுலா தலங்க–ளில் ஒன்றான அடைக்கிற அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையான இன்று ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா அதிகாலை 12 மணிக்கு நடைபெற்றது.இயேசு கிறிஸ்து சுமார் கி.பி. 33 ஆம் ஆண்டு சிலு–வையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவிலிருந்து உயிர்த்ததை குறிக்கும் வித–மாக கிறிஸ்தவர்கள் கொண் டாடும் இந்த நாள் 40 நாள் தவக்காலத்தில் முடிவில் நடைபெறுகிறது.

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு திருப்பலியை ஆலய பங்கு தந்தை அதிபர் தங்கசாமி தலைமையேற்று நடத்தி வைத்தார். திரளான கிறிஸ் தவர்கள் மற்றும் மாற்று மதத்தினர் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாளில் வணங்கி அருள் பெற்று சென்றனர். நிகழ்ச்சியை உதவி பங்கு தந்தை ஞான அருள் தாஸ் நன்றி கூறினார் .




Tags:    

Similar News