ஜெயங்கொண்டம் அரசுப்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
- ஜெயங்கொண்டம் அரசுப்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய முகாமிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமுருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கினார். முகாமில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவ வல்லுநர்கள் குழு கலந்துகொண்டு 150 மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதித்து தேவையான சிகிச்சைகள் மற்றும் உதவி உபகரணங்களை வழங்க பரிசீலினை செய்தனர்.