உள்ளூர் செய்திகள் (District)
அரசு பள்ளியில் உலக மகளிர் தின விழா
- அரசு பள்ளியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது
- மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தலைமை காவலர் கிருஷ்ணமூர்த்தி, வனிதா, சுகுணா, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, வார்டு உறுப்பினர் பூங்காவனம், பள்ளி ஆசிரியர்கள் தங்கபாண்டியன், தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, ரம்யா, இளநிலை உதவியாளர் மணிகண்டன், உட்பட அனைத்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் தமிழரசி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தமிழரசன், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.