உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-05-26 05:22 GMT   |   Update On 2023-05-26 05:22 GMT
  • ஜெயங்கொண்டம் அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணை குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடம் புறப்பாடு நடைபெற்று, வேத பாராயணம், தேவாரம் திருமுறை பதிகங்கள் பாடப்பட்டு, பக்தி சிரத்தையுடன் சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். இந்த நிகழ்வில் அனைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News