முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்
- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது
- அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள அனிதா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, போட்டி யில் வெற்றிப் பெற்ற வீரர்கள் 1,800 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றி தழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகை யில், இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு உரிய முறையில் நிறைவேற்றித்தரும் என்று அவர் பேசினார்.
மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சட்டப் மன்ற உறுப்பினர் சின்னப்பா, கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மை மருத்துவர் முத்து கிருஷ்ணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் நகர துணை காவல் கண்கா ணிப்பாளர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.