உள்ளூர் செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றம்

Published On 2023-03-15 07:19 GMT   |   Update On 2023-03-15 07:19 GMT
  • 190 வழக்குகள் தீர்வு காணப்பட்டது
  • மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்றது

அரியலூர்,

அரியலூர் மாவட்ட சட்டபணிகள் அணைக்குழு சார்பில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் மூத்த சிவில் நீதிபதி அழகேசன், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அறிவு, ஜெயங்கொண்டத்தில் சார பு நீதிபதி லதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ்நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜசேகர் ஓய்வுபெற்ற நீதிபதி முத்துகிருஷ் ணன், நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 சிவில் வழக்கு, 6 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 111 வங்கி வழக்கு, 71 நிலம் கையகப்படுத்திய வழக்கு ஆக மொத்தம் 190 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News