அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் சாதி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் மனு
- அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் சாதி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் மனு அளித்தனர்
- ஜாதி சான்றிதழ் வழங்கி, குழந்தைகள் உயர்கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. அப்போது, அரியலூர் ரயில்வே நிலையம் அருகேயுள்ள எருத்துக்காரன் பட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், தங்களின் பள்ளி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர். அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாக 40 குடும்பங்களை சேர்ந்த இந்து கணிக்கர் ஜாதியை சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை.
எனவே, மதுரை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் தங்கள ஜாதி மக்களுக்கு வழங்கி உள்ளது போல, இந்து கணிக்கர் (எஸ்டி) என ஜாதி சான்றிதழ் வழங்கி, குழந்தைகள் உயர்கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். பள்ளிக்குழந்தைகளுடன் மனு அளிக்க அவர்கள் வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.