உள்ளூர் செய்திகள் (District)
ஊராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- ஊராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ெஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்காக முழு உடல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ெஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில நடைபெற்ற முகாமை சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடக்கி வைத்து பார்வையிட்டார். ஒன்றியக் குழுத் தலைவர் ந.ரவிசங்கர், துணைத் தலைவர் லதா கண்ணன், வட்டார வளரச்சி அலுவலர்கள் பிரபாகரன், அமிர்தலிங்கம் ஆகியோர முன்னிலை வகித்தனர். வட்டார தலைமை மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையிலான மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு, ஊராட்சி அனைத்து நிலை பணியாளர்களின் உடலை பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.