உள்ளூர் செய்திகள் (District)
- விஷம் குடித்த மாணவர் உயிரிழந்தார்
- 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
அரியலூா்:
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா்ண மகாராஜன் மகன் அருள்முருகன் (வயது15). இவா் வெற்றியூா் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அருள்முருகனை, அவரது தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த அவா் பூச்சி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா்.
இதையடுத்து அரியலூா் அரசு மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அருள்முருகன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்