திருமானூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
- திருமானூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம் நடைபெற்றது
- கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி:
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பழுர் பழைய பஸ்நிலையத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்ததை கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் அறிவுறுத்தலின் படி திருமானூர் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாகவும், கீழப்பழுர் நகரக் கழகத்தின் சார்பாகவும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஒன்றிய கழக அவைத் தலைவர் சக்திவேல், தனசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கழக செயலாளர் கமலக்கண்ணன், இலந்தை தேவர், ஒன்றிய முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் நல்லதம்பி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் ஹனிபா, அம்மா பேரவை சீராளன், கீழைக்கழக பிரதிநிதி ரவி, ராஜேஸ்வரி, மலர்விழி நல்லதம்பி, கூட்டுரவு சங்க தலைவர் பூம்புகார், பாண்டியன், அம்மா பேரவை நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொன்டனர்.