உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Published On 2022-08-16 09:26 GMT   |   Update On 2022-08-16 09:26 GMT
  • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
  • சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் காங்கேயம்பேட்டை முனியப்பா கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒருவர், போலீசாரை கண்டதும் டிராக்டரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News