உள்ளூர் செய்திகள் (District)

விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் மின்மோட்டாருடன் கிணறு - கலெக்டர் தகவல்

Published On 2022-06-18 09:49 GMT   |   Update On 2022-06-18 09:49 GMT
  • அரியலூர், திருமானூர் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 38 கிராம பஞ்சாயத்துகளில்ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கு 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3லட்சமும், மின்சாரசக்திமூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்டபம்புசெட்டுகள் அமைப்பதற்கு ரூ.75ஆயிரமும், நிர்விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட பழங்குடியினவிவசாயி–களுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனவசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் பேரவையில் அறிவித்தார்.

இதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ளஅரியலூர், திருமானூர் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 வட்டாரங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 38 கிராம பஞ்சாயத்துகளில்ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் இடத்திற்கு ஏற்றவாறு குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல் நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அரசு வெளியிட்ட ஆணையின்படி 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கு 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3லட்சமும், மின்சாரசக்திமூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்டபம்புசெட்டுகள் அமைப்பதற்கு ரூ.75ஆயிரமும், நிர்விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரசக்தி மூலம் இயங்கக்கூடியஇடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2.50 லட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு வேளாண் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News