உள்ளூர் செய்திகள் (District)

வயநாட்டுக்கு விரைந்த ராணுவப்படை

Published On 2024-07-30 07:03 GMT   |   Update On 2024-07-30 07:03 GMT
  • தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள்.
  • 100-க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர்.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாவும், தொடரந்து பெய்துவரும்ம கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கிகயிருக்கும் பலரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் அங்கு ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மொத்தம் 225 ராணுவ வீரர்கள் வீரர்கள் வயநாட்டில் மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மீட்பு பணி மட்டுமின்றி, நிலச்சரிவால் அடித்துச்செல்லப்பட்ட இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்

வயநாடு நிலச்சரிவில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணுள் புதைத்து இறந்துவிட்டனர். பலியானவர்களில் ஏராளமான குழந்தைகளும் அடங்குவர். சம்பவம் நடந்தது அதிகாலை 2 மணி என்பதால் பலர் தூக்கத்திலேயே மண்ணில் புதைந்து சமாதியானார்கள்.

கனமழை பெய்தபடி இருந்ததால், ஒருவித பதட்டத்துடனே வீட்டுக்குள் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காய மடைந்துள்ளனர். அவர்களில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News