உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.

ஆறுமுகநேரி பொடிபிள்ளை அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2022-07-06 09:06 GMT   |   Update On 2022-07-06 09:06 GMT
  • அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தன.
  • மதியம் மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெற்றன.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பூவரசூர் ஸ்ரீ ஆதிபிராமணி பொடிபிள்ளை அம்மன் மற்றும் ஸ்ரீ இலங்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி 3 நாள் நடைபெற்றது.

நேற்று காலை முதலாம் யாகசாலை பூஜை, பூர்ணாஹிதி, யந்திர ஸ்தாபனம் மற்றும் மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான இன்று காலை 4-வது கால யாகசாலை பூஜை, மகா பூரண ஆகுதி ஆகியவை நடந்தன. வேத பாராயணமும் திருமுறை பாராயணமும் பாடப்பட்டன.

பின்னர் கோவிலின் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

கும்பாபிஷேக வைபவங்களை அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். நிகழ்ச்சியில் ஊர் தலைவர் சிவசக்திவேல் நாடார், சக்திவேல், டாக்டர் வேல்குமார், பார்த்திபன், செல்வம், வெங்கடேசன், செல்வ முருகன், முருகானந்தம், மாரிமுத்து தேவர், சிவசக்திவேல், செல்வ தேவர், ராகவன், தினகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெற்றன. இரவில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

Tags:    

Similar News