அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி 5,070 பேருக்கு அன்னதானம்- நலத்திட்ட உதவி
- தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா பரமன்குறிச்சியில் நடைபெற்றது.
- உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் உள்ளிட்டோர் விழாவில் முன்னிலை வகித்தனர்.
உடன்குடி:
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 5,070 பேருக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா பரமன்குறிச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவரும், உடன்குடிமேற்குஓன்றிய செயலாளருமான பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஆழ்வார்திருநகரி ஒன்றிய செய லாளர் பார்த்திபன், மாநில பிரசாரக்குழு துணை செயலர் ஜெசிபொன்ராணி, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர்அஸ்ஸாப் ஆ லிபாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தி.மு.க. மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் செந்தில், மாடசாமி, கோமதிநாயகம், ஓன்றிய இளைஞரணி துணை செயலர் மனோஜ், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி, ஓன்றிய துணை செயலர் இந்திரா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் தமிழ் அழகன், திருசெந்தூர் ஓன்றிய துணை செயலர் அமிர்தலிங்கம், வீரமணி, கிளை நிர்வாகிகள் கணேசன், பூங்குமார், பொன்விங்கம், அரிச்சந்திரன், ரவி, குமார், மகேஸ்வரி, முத்துக்குமார், மோகன், இசக்கிமுத்து, முத்துக்குட்டி, சுபிதா, தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.