உள்ளூர் செய்திகள் (District)

இனிப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வராகி அம்மன்.

தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

Published On 2023-06-19 10:03 GMT   |   Update On 2023-06-19 10:03 GMT
  • ஆஷாட நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
  • 28-ந் தேதி வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி திருவிழா கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோம த்துடன் தொடங்கியது.

தொடர்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் 2-ம் நாளான இன்று மாலை வராகி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட உள்ளன.

விழாவின் நிறைவு நாளான 28ஆம் தேதி வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இரவு காவடி, செண்டை மேளம், நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வான வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் அம்மன் வீதி உலா நடைபெறும்.

Tags:    

Similar News