உள்ளூர் செய்திகள்

கம்பைநல்லூர் வாரச்சந்தையில் ரூ.35 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

Published On 2022-07-16 10:14 GMT   |   Update On 2022-07-16 10:14 GMT
  • பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
  • ஆடு ஒன்று, 6,700 முதல், 7,200 ரூபாய் வரை விற்பனையானது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் வாரச்சந்தைக்கு, ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, நேற்று, 600-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், கொண்டு ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு வந்தனர்.

ஆடுகளை வாங்க கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

ஆடு ஒன்று, 6,700 முதல், 7,200 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், 35 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News