உள்ளூர் செய்திகள்

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்

Published On 2022-07-30 10:26 GMT   |   Update On 2022-07-30 10:26 GMT
  • கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
  • மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரை ஆற்றினார்.

தருமபுரி,

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குபேச்சுப்போட்டி ,கவிதை, உரையாடல், பாடல், நடனம், ஓவியம் வரைதல் ,கைவினைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கல்வியி யல் வல்லுனர் புகழேந்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது மாணவர்கள் விளையாட்டு மற்றும் கலை துறையில் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். மாணவர்களாக மட்டும் இல்லாமல் அடுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும். எனக்கூறி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரை ஆற்றினார். விழாவில் செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணி மேகலை,நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News