உள்ளூர் செய்திகள் (District)

சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-11-08 09:21 GMT   |   Update On 2022-11-08 09:21 GMT
  • வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல் குறித்து விழிப்புணர்வு.
  • போதை பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து ஆசிரியர் பேசினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையின் சார்பில் மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தலைமையாசிரியர் ஆனந்தன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கவிநிலவன் முன்னிலை வகித்தார்.

ஆசிரியர் அறிவழகன் வரவேற்றார்.வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் பள்ளியில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு உறுதிமொழி படித்து ஏற்க செய்தார். முடிவில் ஆசிரியர் ரெங்கசாமி நன்றி கூறினார்.

இதே போல்வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் எழிலரசன் தலைமை வகித்தார்.

ஆசிரியர் ஆதவன் வரவேற்றார். போதைப் பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து ஆசிரியர் நாகராஜன் பேசினார்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News