வெறிநாய்கடி தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
- சம்பந்தம் மேல்நிலைப்பள்ளியில் வெறிநாய்கடி தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
- நாய்களை பராமரிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இணை இயக்குனர் (பொ) விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் ஆலோசனைப்படி செம்பனார்கோயில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சி சம்பந்தம் மேல்நிலைப்பள்ளியில் வெறிநாய்கடி தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் அன்பரசன், சுதா, மோனிஷா புகழ் ஆகியோர் கலந்துகொண்டு வெறிநாய் கடி தடுப்பு குறித்து மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
முன்னதாக கால்நடை துறை சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி தலைவர் சண்முகம், பள்ளி ஆலோசகர் பாண்டியன், தலைமையாசிரியர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர். நோய் தடுப்பு குறித்தும், நாய்களை பராமரிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.