உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கிய போது எடுத்த படம்.

கொங்குபட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2022-12-15 09:11 GMT   |   Update On 2022-12-15 09:11 GMT
  • அரசு உயர்நிலைப் பள்ளியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சிறப்பு அழைப்பாளராக தீவட்டிப்பட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் கொங்குபட்டி ஊராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமையாசிரியர் மரியதாஸ் தலைமை தாங்கினார். செஞ்சிலுவை சங்க செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தீவட்டிப்பட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். ஆசிரியர் சிவகுமார், சஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News