உள்ளூர் செய்திகள் (District)

ஊட்டியில் சுற்றுலா வாகனங்களில் விழிப்புணர்வு

Published On 2023-04-08 09:23 GMT   |   Update On 2023-04-08 09:23 GMT
  • துணை காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா தலைமை தாங்கினார்.
  • ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கணிவாகவும், பண்போடும் நடந்து கொள்ள வேண்டும்.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் ஊட்டிக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் குறுகிய நகரமான ஊட்டி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனையடுத்து ஊட்டி சேரிங்கிராசில் சுற்றுலா மேக்ஸி கேப் ஒட்டுநர்கள் சங்கம் சார்பில் ஊட்டி நகர துணை காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா தலைமையில் சுற்றுலா வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

பின்னர் அவர் கூறும் போது, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கணிவாகவும், பண்போடும் நடந்து கொள்ள வேண்டும். பாதுகாப்புடன் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல வேண்டும். அதிக வாடகை வசூலிக்க கூடாது. சுற்றுலா பயணிகள் தவறவிடும் செல்போன்கள் மற்றும் பொருட்களை கண்டெடுத்தால் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News