- நெகிழியின் தீமை குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
- ஆலங்குளத்தில் சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆலங்குளம்:
சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி ஆலங்குளத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆலங்குளம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் சுதா தலைமை தாங்கினார். பேரூராட்சி அலுவலகம் முன்பாக தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளில் சென்றது.
அப்போது சுற்றுச் சூழல் தினம் குறித்தும், நெகிழி உள்ளிட்டவைகளின் தீமை குறித்தும் தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி பேரூராட்சிப் பணியாளர்கள் சென்றனர்.
துணைத் தலைவர் ஜான்ரவி, பேரூராட்சி உறுப்பினர்கள் சாலமன் ராஜா, கணேசன், சின்னத் தங்கம், காங்கிரஸ் நகர தலைவர் (பொறுப்பு) அருணாசலம், பேரூராட்சி உதவியாளர் முகைதீன் உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.