உள்ளூர் செய்திகள்

பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

Published On 2023-04-06 09:52 GMT   |   Update On 2023-04-06 09:52 GMT
  • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழகள் வழங்கப்பட்டன.
  • மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா "ப்ரெடிக்டர் 2047" என்ற தலைப்பில் நடந்தது.

இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அறங்காவலர் லாசியா தம்பிதுரை, பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கினர்.

மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழகள் வழங்கப்பட்டன. இதில் அசாரின் மிமிக்கிரி நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்த விழாவில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியின் அறங்காவலர் சுரேஷ்பாபு, வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் இயக்குனர் விஜயலட்சுமி, வேளாங்கண்ணி குழும பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பொறியாளர் சரவணன், தொழிலதிபர்கள் வேலாயுதம், ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News