மது குடிப்பதை கண்டித்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்ட வாலிபர்
- மனமுடைந்த ஆனந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் வேங்கட ராயப்பா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது.
இதை வீட்டில் உள்ளவர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதில் மனமுடைந்த ஆனந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆனந்தின் தந்தை முருகேஷ் கொடுத்த புகாரின்பேரில் பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி தாலுகா பனந்தோப்பு பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மனைவி சித்ரா.
இவர் தீராத வாயிற்று வலியால் தவித்து வந்துள்ளார்.இதில் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல பர்கூர் பகுதியை சேர்ந்த நாகப்பன் என்பவரது மனைவி கஸ்தூரி என்பவர் குடும்ப தகராறில் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.