பொங்கல் பண்டிகைக்கு முன்பாக கிருஷ்ணகிரியில் கொண்டாடப்படும் நள்ளிரவு விழா
- ஓம் சக்தி, அக்குமாரியம்மன், சாமி அழைப்பு நடத்தி வருகின்றனர்.
- கரகத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய முத்தூர், நாகராஜ புரம் கிராமத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டுதோறும் பொங்கலுக்கு முன்பாக வரும் செவ்வாய் கிழமை தினத்தில் மாரியம்மன், ஓம் சக்தி, அக்குமாரியம்மன், சாமி அழைப்பு நடத்தி வருகின்றனர்.
நாகராஜ புரம் கிராமத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு மா விளக்கு ஊர்வலம் தொடங்கியது. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மண்டு பகுதிக்கு சென்று சாமி அழைப்பு நடத்தி வழிபாடு நடத்தினர்.
பின்னர் பூஜை செய்த இரண்டு பூசாரிகளுக்கு சாமி வரவழைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சாமி வந்த பூசாரிகள் கரகத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விட்டனர்.
சாமி கரகத்துடன் எல்லையில் இருந்து கொண்டு ஊரைக் காக்கும் என்பது ஐதீகம். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஊர் மணியகாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.