உள்ளூர் செய்திகள்

வரத்து குறைவால் வெற்றிலை விலை தொடர்ந்து உயர்வு

Published On 2022-06-17 08:39 GMT   |   Update On 2022-06-17 08:39 GMT
பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர், பாண்ட மங்கலம், செல்லப்பம்பாளையம் , வெங்கரை,நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர்.

வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ. 8 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ. 2,500-க்கும் விற்பனையானது. 104 கவுளிகொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ. 2,500-க்கும், 104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.1,300-க்கும்விற்பனையானது.

நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ .9000-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ. 4 ஆயிரத்திற்கும் விற்பனையானது.104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ. 4 ஆயிரத்திற்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ. 1700- க்கும் விற்பனையானது. வெற்றிலை உற்பத்தி குறைவின் காரணமாக வெற்றிலை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News