உள்ளூர் செய்திகள்

குடிநீர்குழாய் விஸ்தரிப்பு பணிகளுக்கு பூமிபூஜை

Published On 2023-01-11 07:12 GMT   |   Update On 2023-01-11 07:12 GMT
  • 800மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது .
  • வார்டு கவுன்சிலர்கள் ,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி வார்டு எண்-15 முத்தீஸ்வரன் நகர் மேல்நிலைத்தொட்டி முதல் பெருமாள் கோவில் வீதி வரை 100 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சுமார் 800மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது .

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன்,வார்டு கவுன்சிலர்கள் ,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News