உள்ளூர் செய்திகள்
குடிநீர்குழாய் விஸ்தரிப்பு பணிகளுக்கு பூமிபூஜை
- 800மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது .
- வார்டு கவுன்சிலர்கள் ,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி வார்டு எண்-15 முத்தீஸ்வரன் நகர் மேல்நிலைத்தொட்டி முதல் பெருமாள் கோவில் வீதி வரை 100 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சுமார் 800மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது .
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன்,வார்டு கவுன்சிலர்கள் ,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.