உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமிபூஜை

Published On 2023-01-24 09:29 GMT   |   Update On 2023-01-24 09:29 GMT
  • புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
  • பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

ஒசூர் சட்டமன்ற தொகுதி, ஒசூர் ஒன்றியம் தொரப்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நிதியிலிருந்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அனிதாமுனிராஜ் ஏற்பாட்டில் சுமார் 7 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் துணை மேயர் ஆனந்தய்யா, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தம்மா, மற்றும் ராமமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News