உள்ளூர் செய்திகள்

ஓசூரில் புத்தக கண்காட்சி

Published On 2022-07-05 08:17 GMT   |   Update On 2022-07-05 08:17 GMT
  • 8-ந்தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
  • ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து ஓசூரில் புத்தக கண்காட்சியை நடத்துகின்றன.

ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் வளாகத்தில், வருகிற 8-ந்தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்களும், அறிவியல் இயக்க மற்றும் புத்தக கண்காட்சி பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News