உள்ளூர் செய்திகள் (District)

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்.

கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி

Published On 2022-12-18 09:58 GMT   |   Update On 2022-12-18 09:58 GMT
  • ஐ.டி.ஐ. அருகே கார் சென்றபோது எதிரே தஞ்சை நோக்கி வந்த மற்றொரு கார் மோதியது.
  • இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிகோட்டையில் இன்று மதியம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு ஐ.டி.ஐ. அருகே அந்த கார் சென்றபோது எதிரே தஞ்சை நோக்கி மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். சிலர் பலத்த காயமடைந்தனர்.‌

தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News