பெண்ணிடம் வரதட்சணை கேட்ட கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- மதன் வீட்டில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
- கார்த்திகா அவருடைய செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் தனது கணவர் பல பெண்களுடன் பழக்கம் வைத்திருப்பது தெரிய வந்தது.
தருமபுரி,
ஈரோடு மாவட்டம், செங்குண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பட்டுகோனம்பட்டிக்கு கபடி விளையாட வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த நாகராஜ் மகன் மதன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இதனையடுத்து இருவரும் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மதன் வீட்டில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஊத்தங்கரையில் உள்ள மதனுடைய சித்தி வீட்டில் தங்கி இருக்கும் போது கார்த்திகா அவருடைய செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் தனது கணவர் பல பெண்களுடன் பழக்கம் வைத்திருப்பது தெரிய வந்தது. பின்னர் இருவருக்கும்
ஏற்பட்ட தகராறில் மதன் கார்த்திகாவை அடித்து மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து கார்த்திகா பாப்பிரெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மதன், அவரது உறவினர்கள் மகேஷ்வரி, சாமிநாதன், பழனியம்மாள் ஆகிய 4 பேர் மீது வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.