உள்ளூர் செய்திகள்

இரு தரப்பு மோதலில் 5 பேர் மீது வழக்கு

Published On 2023-02-17 07:33 GMT   |   Update On 2023-02-17 07:33 GMT
  • தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.
  • இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியை சேர்ந்த

ரவி (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (32) என்பவருக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றி இருதரப்பை சேர்ந்த குமரவேல், சத்யராஜ்,ரவி, இருசாகவுண்டர், கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News