உள்ளூர் செய்திகள்

கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

Published On 2022-06-11 09:24 GMT   |   Update On 2022-06-11 09:24 GMT
மல்லூர், ஆட்டையாம்பட்டியில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் அந்த பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மல்லூர் வாழ குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

ஆனால் அதற்கு வட்டியுடன் சேர்த்து 80 ஆயிரம் பணம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூபதி மேலும் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து மல்லூர் போலீசில் சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது கந்துவட்டி வழக்குப்பதிவு செய்து பூபதியை தேடி வருகிறார்கள்.

இதேபோல ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது25). இவர் ஆட்டையாம்பட்டி ராசிபுரம் மெயின் ரோட்டில் வசித்து வரும் தண்டபாணி என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் ரூ.1 லட்சமாக திருப்பி கேட்டு தண்டபாணி மிரட்டுவதாக சுரேஷ்குமார் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார் .அதன்பேரில் தண்டபாணி மீது கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News