உள்ளூர் செய்திகள்

பீளமேட்டில் மருந்து கடையில் பணம் கொள்ளை

Published On 2022-07-25 09:42 GMT   |   Update On 2022-07-25 09:42 GMT
  • மசக்காளிபாளையம் ரோட்டில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • மருந்து கடையை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கோவை 

கோவை சவுரிபாளையம் அருகே உள்ள மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 48). இவர் லட்சுமிபுரம் மசக்காளிபாளையம் ரோட்டில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கடையின் ஷட்டரை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.


மறுநாள் கடையை திறக்க வந்த சகாயராஜ் கடையில் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்து கடையை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.  

Tags:    

Similar News