உள்ளூர் செய்திகள்

செல்போன் கடையில் திருட்டு; ஒருவர் கைது

Published On 2023-02-21 08:25 GMT   |   Update On 2023-02-21 08:25 GMT
  • பல மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.
  • 3 செல்போன்கள், 1 லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரன் இருப்பு கடைவீதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் வேட்டைக்காரன் இருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.

அப்படி மீன் பிடிக்க வந்த போது, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் கோட்டை மணி (வயது 49) மற்றும் மணிகண்டன் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது.

இதில் கோட்டை மணி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 3 செல்போன்கள், 1 லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவான மணிகண்டனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News