உள்ளூர் செய்திகள்
முத்துமாரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
- விழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணத்தில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.
மேலும் அப்பகுதி கிராமமக்கள் பலர் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவோணம் போலீசார் செய்திருந்தனர்.