உள்ளூர் செய்திகள் (District)
சங்கரன்கோவில் நகராட்சி தலைவருக்கு கார்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- வாகனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிசரவணன் பெற்றுக் கொண்டார்.
- முதல்-அமைச்சர் கைகளால் அரசு வாகனத்தின் சாவியை பெற்றது மிகவும் மகிழ்வான தருணம் என்று உமா மகேஸ்வரி சரவணன் கூறினார்.
சங்கரன்கோவில்:
சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சி தலைவர் மற்றும் பொறியாளர்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது.
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி பொறியாளர்களுக்கான வாகனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிசரவணன் பெற்றுக் கொண்டார்.
அப்போது உடன் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சிகளின் இயக்குனர் பொன்னையன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
இதுகுறித்து பேசிய உமா மகேஸ்வரி சரவணன், தான் முதல்-அமைச்சர் கைகளால் அரசு வாகனத்தின் சாவியை பெற்றது தனக்கு மிகவும் மகிழ்வான தருணம். இந்த சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.