உள்ளூர் செய்திகள்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2023-04-25 07:37 GMT   |   Update On 2023-04-25 07:37 GMT
  • சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
  • தேரோட்டம் வருகிற 3-ந்தேதி காலை நடைபெறுகிறது.

சங்கரன்கோவில்:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

சித்திரை திருவிழா

விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. காலை 5.47 மணிக்கு சங்கர லிங்கசுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷே கங்கள், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சிகளை சரவணன்பட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்தனர்.

இதில் தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அறநிலை யத்துறை இணைஆணையர் அன்புமணி, துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், தொழிலதிபர் பி.ஜி.பி. ராமநாதன், கோமதி அம்பாள் மாதர் சங்க தலைவர் பட்டமுத்து, ஜோதிடர் குமார், வெள்ளத்துரை, ஜெயக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

சித்திரை திருநாளில் சுவாமி அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடு களைகோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News