உள்ளூர் செய்திகள்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-04-24 10:25 GMT   |   Update On 2023-04-24 10:26 GMT
  • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6-ந் தேதி நடைபெறுகிறது.
  • அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (செவ்வாய்கி ழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து 29-ந் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

அன்று 6 ஊர்களில் இருந்து சாமிகள் கோவி லுக்கு வந்து சன்னதிக்கு முன்பு சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெறும். அடுத்த மாதம் 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பி கையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்று த்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டி யூர், திருப்பூந்து ருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தா னத்தில் சங்கமிக்கிறது.

7-ந் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழழ ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News