உள்ளூர் செய்திகள்

ஜெய் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் - புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

மெஞ்ஞானபுரம் அருகே ஜெய் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Published On 2022-12-27 09:31 GMT   |   Update On 2022-12-27 09:31 GMT
  • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஜெய் கல்வி குழுமத்தின் நிறுவனர் சுப்பையா தலைமை தாங்கினார்.
  • விழாவில் பள்ளி குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கை மொழியில் ஜெய் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெய் கல்வி குழுமத்தின் நிறுவனர் சுப்பையா தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை ரோஸ் நிர்மலா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக சாத்தான்குளம் சரக கல்வி கழகத் தலைவர் ஜோசப், இலங்கநாத புரம் பங்குத்தந்தை ஜோசப் ரத்தினராஜ், புதுக்குளம் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆண்டனி சேவியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி இயக்குனர் ஜெய் முருகன் சிறப்பு அழைப்பாளர்களை கவுரவப்படுத்தினார். பள்ளி குழந்தைகளின் பரதநாட்டியம், ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி இயக்குனர் ஜெய்முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி முதல்வர் அனுபமா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 3-ம் வகுப்பு மாணவி அவனி பூஹணம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News