உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் பேரூராட்சியில் தூய்மைப் பணிகளை பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் தொடங்கி வைத்த காட்சி.

காரிமங்கலம் பேரூராட்சியில் தூய்மைப் பணிகள் தொடக்கம்

Published On 2023-10-05 10:08 GMT   |   Update On 2023-10-05 10:08 GMT
  • காரிமங்கலத்தில் பேரூராட்சியில் தூய்மைப் பணிகள் துவங்கியது.
  • பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன் தலைமை வகித்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் தூய்மை தினத்தை முன்னிட்டு 6-வது வார்டில் ஒருங்கிணைந்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன் தலைமை வகித்து தூய்மை பணியை தொடங்கி வைத்தனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் அரிமா சங்கத்தினர் இணைந்து குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி பொதுமக்கள் தங்களது வீட்டு குப்பைகளை பொது இடத்தில் போடாமல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்கு வதுடன் தங்களது பகுதிகளை குப்பை இல்லாத பகுதிகளாக மாற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ஆயிஷா, துணை தலைவர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர்கள் ரமேஷ், சதீஷ்குமார், மாதப்பன், சத்திரமேஷ், ராதாராஜா, கீதமுத்து செல்வம், பிரியா சங்கர், சிவக்குமார், செவத்தா, நாகம்மாள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News