- மேலும் இம்முகாமில் இரண்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு முதியோர் உதவி தொகையும் வழங்கினார்.
- அது சமயம் அய்யம்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட 25 கிராமங்களுக்கு வருவாய் தீர்வாய கணக்கு நடைபெற்றது.
தஞ்சாவூர்:
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.
அது சமயம் அய்யம்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட 25 கிராமங்களுக்கு வருவாய் தீர்வாய கணக்கு நடைபெற்றது.
பொது மக்களிடம் இருந்து 144 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் இம்முகாமில் இரண்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு முதியோர் உதவி தொகையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சித் துணை ஆட்சியர் விஷ்ணுபிரியா , பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் , சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் , திருவையாறு ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் நெடுஞ்செழியன் , தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ரத்தினவேல், துணை வட்டாட்சியர்கள் பிரியா, விவேகானந்தன், தமயந்தி, விமல் , வருவாய் ஆய்வாளர் ரெஜிலாதேவி, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் , பிறதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.