கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
- பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
- கடையநல்லூர் அருகே உள்ள அனைத்து கல் குவாரிகளையும் கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சொக்கம்பட்டி, புன்னையாபுரம், போகநல்லூர், திரிகூடபுரம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளின் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெறும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளில், மண்வரப்பு, அங்கன்வாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் சொக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் என பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் கடையநல்லூர் அருகே உள்ள அனைத்து கல் குவாரிகளையும் கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமம் ஊராட்சி) ராதா, உதவி பொறியாளர் ஜான் சுனிர்தராஜ், கவுன்சிலர் சிங்கிலி பட்டி மணிகண்டன், பஞ்சாயத்து தலைவர்கள் திரிகூடபுரம் முத்தையா பாண்டியன், சொக்கம்பட்டி பச்சைமால், போக நல்லூர் சண்முகப்பிரியா, புண்ணியாபுரம் திலகவதி கண்ணன், பஞ்சாயத்து கிளர்க் முருகேசன், தங்கத்துரை, மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.