உள்ளூர் செய்திகள் (District)

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாரூஸ்ரீ ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-07-13 07:01 GMT   |   Update On 2023-07-13 07:01 GMT
  • ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2 வகுப்பறை கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.
  • பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் சங்கேந்தி ஊராட்சியில் ரூ.7.49 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் சமையலறை கூடம் கட்டப்பட்டு வருவதையும், உதயமா ர்த்தாண்டபுரம் ஊராட்சி யில் ரூ.33.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், உப்பூர் ஊராட்சியில் ரூ.7.49 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் சமையலறை கூட கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், தலா ரூ.2.4 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதையும், முத்துப்பேட்டையில் ரூ.395.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.15.15 லட்சம் மதிப்பீட்டில் கற்பகநாதர்குளம் பகுதியில் அங்கான்வாடி மையம் கட்டப்பட்டு வருவது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளை விரைந்து முடிந்து பயன்பா ட்டிற்கு கொண்டுவர அலு வலர்களுக்கு அறிவுறு த்தினார். ஆய்வி ன்போது முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்கு மார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News